மரத்தில் தூக்கில் தொங்கியபடி ஆண் தற்கொலை

by Staff / 14-07-2023 02:08:58pm
மரத்தில் தூக்கில் தொங்கியபடி ஆண் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த ஓடைப்பட்டி காட்டு பகுதி மரம் ஒன்றில் துாக்கிட்டு இறந்த நிலையில் ஒருவர் தொங்கி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாடிக்கொம்பு எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது திண்டுக்கல் ஆர்விஎஸ் நகரில் செயல்பட்டு வரும் தனியார் போதை விடுதலை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று அங்கேயே வேலையும் செய்து வந்த சிறுமலையை சேர்ந்த சந்திரசேகர் (வயது 30) என்பதும், இவர் கடந்த ஜூலை 3ம் தேதி விடுதியில் இருந்து தப்பித்து சென்று விட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via