குடிநீர் வாரிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகம், கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சிந்தாதரிப்பேட்டையில் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகம் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த இடம் குடிநீர் வழங்கல் துறையின் தலைமை அலுவலகமாக செயல்படுகிறது. நகரின் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்று வாரியத்தின் பணிகளை கண்காணிக்கும் மையம் செயல்படவுள்ளது.
Tags :