இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அத்வானிக்கு வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி
பாரதிய ஜனதா கட்சியினுடைய மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமரும் இந்தியாவெங்கும் பாரதிய ஜனதா கட்சியை கட்டமைத்தவருமான அத்வானிக்கு அரசியல் சமூக சேவைகளுக்காக மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவப்படுத்த உள்ளது.
இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அத்வானிக்கு வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தாம் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார் .அவர் இது குறித்து தம் சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில், நம் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவர் அத்வானி .அவர் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் மகத்தானது. கட்சியினுடைய சாதாரண தொண்டராக இருந்து துணை பிரதமர் வரைக்கும் உயர்ந்தவர் .இந்திய நாட்டிற்கு பல சேவைகளை செய்ததோடு தேச ஒற்றுமைக்கும் கலாச்சார மறுமலர்ச்சிக்கும் அவர் பங்களிப்பு இணையற்றது என்று பாராட்டியுள்ளதோடு அவரோடு பழகிய தருணம் குறித்தும் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்படுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவரோடு பழகுவதற்கும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்வதற்கும் தனக்கு வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுவதோடு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதற்கு அவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது என்றும் நாடாளுமன்றத்தில் அத்வானியின் செயல்பாடுகள் முன் உதாரணமாக இருந்ததாக குறிப்பிட்டதோடு விருது பெற்றுள்ள அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் பிரதமர் பதிவிட்டுள்ளார்..
Tags :