ரூ.1000 வதந்தியை நம்பி குவிந்த பெண்கள்

by Staff / 17-08-2024 01:59:57pm
ரூ.1000 வதந்தியை நம்பி குவிந்த பெண்கள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்காக கலெக்டர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாகவும் வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இந்த தகவலை நம்பிய பெண்கள், நெல்லை, விழுப்புரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் குவிந்தனர். அவர்களிடம் வாட்ஸ் அப்பில் வரும் தவறான தகவலை நம்பி யாரும் வர வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்து அனுப்பினர்.

 

Tags :

Share via