CLAT தேர்வில் தேர்ச்சி.. மலைவாழ் மாணவருக்கு வாழ்த்து சொன்னமுதலமைச்சர்

திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத், பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இதன்மூலம் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை.-யில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையையும் பரத் படைத்துள்ளார். மாணவரை முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். மேலும், “மாணவரின் சட்டப் படிப்புக்குத் திமுக சட்டத்துறையும், அதன் செயலாளர் என்.ஆர். இளங்கோ அவர்களும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்” என தெரிவித்துள்ளார்.
Tags :