நகைக்கடையில் கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய பெண்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயலட்சுமி ஜூவல்லரி என்ற நகைக்கடைக்கு கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் சென்றுள்ளார். நகையை வாங்குவது போல நடித்து, தங்க நகையை பைக்குள் பெண் போட்டுவிட்டு, கவரிங் நகையை மாற்றி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். கவரிங் நகை மாற்றி வைக்கப்பட்டதை அறிந்த கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags :