நேற்று வி.சி.க, த.வெ.க அமைச்சரவையில் பங்கேற்றநிலையில்,பல்வேறு விமர்சனங்கள்எழுந்ததன்காரணமாக தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு விளக்கம்
அமைச்சரையில் விடுதலைச் சிறுத்தை கட்சி இணைந்ததற்கு எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கங்களை அளித்தார்.. தாவைக்கு அமைச்சரவை நேசிக்க அடைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் அதிகார மையத்தில் ஒழிக்க வேண்டும் என்கிற அரசியல் உரிமைகள் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையில் பங்கு எடுப்பது தொடர்பான கட்சியின் உயர்மட்ட குழுவிலும் முன்னணி பொறுப்பாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் பெரும்பான்மையான நிர்வாகிகளின் விருப்பத்தின் பேரிலேயே அமைச்சரவையில் சேரும் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்..தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு அமைச்சர் அவையில் பங்கேற்குமாறு வெளிப்படையான அழைப்பு விடுக்கப்பட்டது அந்த அழைப்பை ஏற்று விசிக அமைச்சரவையில் இடம் பெற்றது. அமைச்சரவையில் இடம் பெற்றதற்கு கடுமையான எதிர்ப்புகள் விமர்சனங்கள் எழுந்தன. எனக்கு பதில் அளிக்கும் விதமாகத்தான் அவர் இந்த செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். தமிழகத்தில் மீண்டும் ஒரு மனிதர்களோ அல்லது ஜனாதிபதி ஆட்சியை வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் மதச்சார்பற்ற கொள்கை அடிப்படையிலும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு முதலில் விசிக நிபந்தனை அற்ற ஆதரவு நல்கியதாகவும் அதன் தொடர்ச்சியாகவே தற்பொழுது ஆட்சியில் பங்கு எடுத்து உள்ளது என்றும் தெரிவித்ததோடு தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உடன் இது குறித்து பேசிய பின்னரே அமைச்சரவையில் இடம் பெற்றதாகவும் தெரிவித்தார்.
Tags :


















