குடும்ப பிரச்சனை காரணமாக மலையடிவார பள்ளத்தில் இரண்டு மகளுடன் இடுப்பில் கயறு கட்டிக்கொண்டு தாய் தற்கொலை

by Editor / 04-07-2022 02:27:33pm
குடும்ப  பிரச்சனை காரணமாக  மலையடிவார பள்ளத்தில் இரண்டு மகளுடன் இடுப்பில் கயறு கட்டிக்கொண்டு தாய் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் சித்தான் வாசனை மலையடிவாரத்தில்  பள்ளத்தில் விழுந்து தாய் மட்டும் இரண்டு மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 அடி ஆழம் கொண்ட நீர் நிரம்பி இருந்த மலை அடி பள்ளத்தில் நேற்று காலை 10 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் தனது இரண்டு மகளுடன் இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு குதித்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரையும் மீட்டனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சள் விடுதியை சேர்ந்த மாரிக்கண்ணு மற்றும் மகள் கோபிகா என்பது தெரியவந்தது கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via