திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கட்டண தரிசனம் ரத்து.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கட்டண தரிசனம் ரத்து.நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத்துறை நடவடிக்கை.
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை முதல் 250 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம், 20 ரூ கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 100 ரூபாய் கட்டண தரிசனம், மற்றும் பொது தரிசனங்களில் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி நாளை முதல் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது - திருச்செந்தூர் திருக்கோவில் இணை ஆணையர் தகவல்.
Tags : Thiruchendur Arulmigu Subramania Swamy Temple