ஓட ஓட விரட்டி பால் வியாபாரி வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை

by Staff / 01-12-2023 01:43:29pm
ஓட ஓட விரட்டி பால் வியாபாரி வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை

தூத்துக்குடி பண்டாரம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் மற்றும் விக்னேஷ் ஆகிய இரண்டு பேரும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பன்றி வளர்ப்பு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் இரண்டு பேருக்கும் பன்றி விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவேறு தொழிலுக்கு செல்லலாம் என முடிவெடுத்து பன்றிகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில் இன்று காலை 10: 30 மணி அளவில் பால் வியாபாரி நந்தகுமார் பால் வியாபாரத்தை முடித்துவிட்டு மீளவிட்டான் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டுஇருந்துள்ளார்.

அப்போது மீளவிட்டான் குளம் அருகே மறைந்திருந்த விக்னேஷ் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட கும்பல் நந்தகுமாரை வழிமறித்து பேசியதாக கூறப்படுகிறது அப்போது அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் நந்தகுமாரின் பின் தலைப்பகுதியில் அரிவாளால் வெட்டியுள்ளது இதைத் தொடர்ந்து அவர் ஓடி உள்ளார் ஆனால் தொடர்ந்து அந்த கும்பல் அவரை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது இதில் சம்பவ இடத்திலேயே நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். ‌விரைந்து வந்த ரூரல் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பன் விக்னேஷ் விக்னேஷ் உள்ளிட்ட கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது

 

Tags :

Share via