கடும் பணிமூட்டம் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி

by Editor / 02-09-2022 08:53:52am
கடும் பணிமூட்டம் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் திடீரென  எதிரே வருபவர் யார் என்று தெரியாத அளவிற்கு கடும் பணிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மின்விளக்குகளை ஒளிரவிட்டவாறு வாகனங்களை இயக்கி சென்றனர்.

உளுந்தூர்பேட்டை பகுதியில் கடும் மூடு பணி காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர் மேலும் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் மெதுவாக சென்றது.

 

 

Tags :

Share via