ஓசியில் சிக்கன் பக்கோடா தராததால் கத்தி குத்து
சென்னை பாடி குமரன் நகர் பகுதியில் சிவா என்பவர் சிக்கன் பக்கோடா நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிவா வழக்கம் போல் தனது கடாயில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டுள்ளார். சிவா, ஓசியில் தரமுடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அக்கம்பக்கத்தினர் அனுமதித்தனர். சிசிடிவி ஆய்வுகளின் அடிப்படையில் உதயகுமார் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :