விபத்துக்குள்ளான விமானம் யாராவது உயிர்பிழைத்த உள்ளார்களா மீட்புப் பணியாளர்கள் தீவிர தேடுதல்

by Staff / 23-03-2022 01:33:29pm
விபத்துக்குள்ளான விமானம் யாராவது உயிர்பிழைத்த உள்ளார்களா மீட்புப் பணியாளர்கள் தீவிர  தேடுதல்


சீனாவில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பகுதியில் இரவு பகலாக தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஈஸ்டர்ன்  நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் வனப் பகுதியில் விழுந்து நொறுங்கியது இவ்விபத்தில் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் விபத்தில் யாராவது உயிர் பிழைத்தார்கள் என தேடும் பணிகளில் 2000 பேர் ஈடுபட்டுள்ளனர் பயணிகளின் உடமைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் 6 லட்சத்து எண்பதாயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பகுதியில் ட்ரோன் கேமரா கொண்டு கருப்பு பெட்டியை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

 

Tags :

Share via