6ஆம் வகுப்பு மாணவியின் தலையில் ஆசிரியை அடித்ததால் மண்டை ஓடு உடைந்தது.
6ஆம் வகுப்பு மாணவியின் தலையில் பாத்திரம் கொண்டு ஆசிரியை அடித்ததால் மண்டை ஓடு உடைந்தது. ஆந்திராவின் சித்தூர் புங்கன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் செப்., 10ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தி ஆசிரியை சலீமா, மாணவி சாத்விகாவை தாக்கியுள்ளார். சிறுமிக்கு கடுமையான தலைவலி, தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து ஸ்கேன் செய்தபோது, மண்டை ஓடு சேதம் அடைந்தது தெரியவந்துள்ளது. ஆசிரியை சலீமா, பள்ளி முதல்வர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tags : 6ஆம் வகுப்பு மாணவியின் தலையில் ஆசிரியை அடித்ததால் மண்டை ஓடு உடைந்தது.



















