நெதர்லாந்தில் மெக்டொனால்டு உணவகத்திற்குள் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு 2 பேர் உயிரிழப்பு

நெதர்லாந்தில் ஸ்வோஸ் நகரிலுள்ள மெக்டொனால்டு உணவகத்திற்கு மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
வாடிக்கையாளர் போன்று உணவகத்திற்குள் நுழைந்த அந்த மர்மநபர் உணவை ஆர்டர் செய்துவிட்டு மேஜையில் அமர்ந்து உள்ளான்.
எதிரே உணவருந்திக் கொண்டிருந்த இருவரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் இதில் படுகாயமடைந்த இருவரும் உணவகத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.
இச்சம்பவம் உணவகத்தில் இருந்த மற்ற வாடிக்கையாளர் மத்தியில் பீதியை ஏற்படுத்திய நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்
Tags :