பிரபல ரவுடி தலை துண்டித்து கொடூர கொலை

by Staff / 24-01-2024 01:04:54pm
பிரபல ரவுடி தலை துண்டித்து கொடூர கொலை

திருச்சியில் பிரபல ரவுடி தலை துண்டிக்கப்பட்டு முகம் சிதைத்த நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் மண்டை வெட்டி மாதவன் (50). இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. எதிரிகளின் தலையை வெட்டி கொலை செய்வதால் இவரது பெயரோடு 'மண்டை வெட்டி' என்ற அடைமொழி சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via