பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை தந்தை தயாப் என்பவர் உயிருடன் புதைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். தொடர்ந்து புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தந்தையிடம் விசாரித்தபோது, மருத்துவமனை செலவை தாங்க முடியாத காரணத்தினால் குழந்தையை சாக்கு மூட்டையில் கட்டி புதைத்ததாக கூறியுள்ளார்.
Tags :