விநாயகர் சிலைகள் விஜர்சனஊர்வலம் - 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

by Editor / 04-09-2022 10:08:54am
 விநாயகர் சிலைகள் விஜர்சனஊர்வலம்   - 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும்  விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த மாதம் 31ம் தேதி விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிலைகளை இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் விஜர்சனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் விஜர்சனம் செய்யப்படுகின்றன.

இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் இன்று 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் புறப்படும் இடத்திலிருந்து, கடலில் விஜர்சனம் செய்யப்படும் இடம் வரையில் போலீசார் உடன் சென்று பாதுகாப்பு அளிக்கின்றனர். விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்படும் வாகனத்துடன் போலீஸ் வாகனம் ஒன்றும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பாதைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via