17ஆம் தேதி மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி

by Staff / 15-04-2024 01:38:52pm
17ஆம் தேதி மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி

தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக திமுக, அதிமுக, நாதக, பாஜக என அனைத்து கட்சிகளும், கூட்டணிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறவுள்ளதால், 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும். ஆனால் கோடை வெயில் அதிகமாக இருப்பதால், இந்த முறை 6 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via