மேற்கு வங்க ரயில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்.

by Staff / 17-06-2024 12:59:39pm
மேற்கு வங்க ரயில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்.

மேற்கு வங்கத்தில் இன்று நடந்த ரயில் விபத்து பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து தன்னை மிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நிலைமை குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல இருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via