அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று (ஜுலை 5) இடைக்கால உத்தரவு வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. விசாரணை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திகார் சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தாக்கல் செய்த பணமோசடி வழக்கில் ஜுன் 26ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். ஜுலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags :