“தவெக ஆட்சியை யாரும் எதுவும் செய்ய முடியாது".. அமைச்சர் நிர்மல்குமார்
தவெக அமைச்சர் நிர்மல்குமார் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களின் எதிர்பார்ப்பை முதலமைச்சர் நிறைவேற்றுவார்” என்றார். தொடர்ந்து, மாதம் ரூ.2,500 கொடுப்பதாக கூறிவிட்டு ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நிதிநிலை அறிக்கையை பார்த்த பிறகு தான் இது குறித்து முடிவு எடுக்க முடியும்; இதுதான் நடைமுறை. கடந்த ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்” என தெரிவித்துள்ளார்.
Tags :


















