கை, கால்கள் கட்டப்பட்டு 70 வயது மூதாட்டி கொலை
சென்னை அம்பத்தூரில் 70 வயது மூதாட்டி பொன்னம்மாள் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைகார கும்பல் இன்று, மூதாட்டியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து நெறித்து கொலை செய்துள்ளது. தொடர்ந்து, வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து, தடயங்களை அழிக்க உடலில் தண்ணீர் ஊற்றிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















