ஆடுகளை திருடிய 3 பேர் கைது - ரூபாய் 30,000/- மதிப்புள்ள 3 ஆடுகள் மீட்பு.

by Editor / 15-07-2023 11:16:50pm
ஆடுகளை திருடிய 3 பேர் கைது - ரூபாய் 30,000/- மதிப்புள்ள 3 ஆடுகள் மீட்பு.

ஆடுகளை திருடிய 3 பேர் கைது - ரூபாய் 30,000/- மதிப்புள்ள 3 ஆடுகள் மீட்பு.

தூத்துக்குடி மாவட்டம்  சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சேகர் (61) என்பவர் தனது ஆடுகளை அவரது வீட்டின் எதிர்ப்புறம் உள்ள செட்டில் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் அதில் ஒரு தாய் ஆடு மற்றும் இரண்டு குட்டி ஆடுகள் திருடுபோயுள்ளது.

இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. கலைவாணர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி தேவர் காலனி பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டி மகன் சிவா (20), தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டிபன் மகன் ஜோசுவா டேனியல் (19) மற்றும் தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் மகன் ஜெய்சஞ்சய் (19) ஆகியோர் மேற்படி சேகரின் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் எதிரிகளான சிவா, ஜோசுவா டேனியல் மற்றும் ஜெய்சஞ்சய் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 30,000/- மதிப்புள்ள திருடப்பட்ட 3 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.
 

 

Tags :

Share via