ரயில் விபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

by Staff / 17-06-2024 12:53:35pm
ரயில் விபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுடியில் இன்று (ஜூன் 17) கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக டார்ஜிலிங் ஏஎஸ்பி அபிஷேக் ராய் தெரிவித்திருந்தார். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது விபத்தின் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

Tags :

Share via