பட்டா கத்தியுடன் பதுங்கி இருந்த 3பேர் கைது

by Staff / 15-02-2023 04:31:26pm
பட்டா கத்தியுடன் பதுங்கி இருந்த 3பேர்  கைது

கோவை செல்வபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், நடராஜன், சிலம்பரசன், நேற்று அங்குள்ள செல்வ சிந்தாமணி குளக்கரையில், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அப்பொழுது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை, பிடித்து, சோதனை மேற்கொண்டனர், அவர்களிடம் மூன்று பட்டாக்கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன், அங்கு பதுங்கி இருந்தது, தெரியவந்தது, இதனை அடுத்து மூன்று பேரையும் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து, நடத்திய விசாரணையில் அவர்கள் தெலுங்குபாளையத்தை சேர்ந்த கனகராஜ் என்ற 32 வயதான தொங்கு ராஜா, சொக்கம்புதூரை சேர்ந்த 23 வயதான பிரதாப், செல்வபுரத்தை சேர்ந்த 26 வயதான இந்திரகுமார் என்பது தெரியவந்தது, மூன்று பேரையும் கைது செய்து, மூன்று பட்டாகத்திகளை பருமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை நேற்று நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via