திண்டுக்கல் ரவுடி கொலை: 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

by Staff / 08-07-2024 03:37:53pm
திண்டுக்கல் ரவுடி கொலை: 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வினோத்(30). கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த அவர் நேற்று(ஜூலை 7) இரவு வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்ப கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர் இதில் 4 பேர் 17 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஆவர். வினோத் செய்த கொலைக்கு பழியாக இந்த கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

Tags :

Share via