புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணி

by Admin / 02-06-2023 06:43:23pm
புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணி

கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து,

கோவில்பட்டி கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலாயுதபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், கழுகுமலை நகர இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி வேல்ராஜ் கோபி,மாயாதுரை. உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்

.கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணி
 

Tags :

Share via