திருமண விருந்தில் கத்திக்குத்து - ஒருவர் பலி

by Staff / 28-10-2022 03:28:12pm
 திருமண விருந்தில் கத்திக்குத்து - ஒருவர் பலி

திருமண விருந்தில் ரசகுல்லா கிடைக்காததால் மணமக்களின் உறவினர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தகராறு முற்றியதில் கத்திக்குத்து விழுந்த வாலிபர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் ஆக்ராவின் எத்மத்பூரில் நடந்துள்ளது.மொஹல்லா ஷேக்கானை சேர்ந்த உஸ்மான் என்பவரின் மகள் திருமணத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. விருந்தில் வினியோகிக்கப்படும் ரசகுல்லா தீர்ந்து போகவே தகராறு முற்றியது. இதில் கத்திக்குத்து பட்டு படுகாயம் அடைந்த சன்னி (22) ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.காயமடைந்தவர்கள் எத்மத்பூர் சமூக சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

 

Tags :

Share via