கோரமண்டல் ரயில் விபத்து சம்பவம் - இதுவரை தகவல்கள் :

by Editor / 02-06-2023 10:19:55pm
கோரமண்டல் ரயில் விபத்து சம்பவம் - இதுவரை தகவல்கள் :

▪️கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாஹனகா ரயில் நிலையம் அருகே இன்று இரவு 7.20 மணி அளவில் விபத்துக்குள்ளானது

▪️கோரமண்டல் விரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் மற்றும் ஒரு பாசஞ்சர் ரயில் விபத்தில் சிக்கியதாக ஒடிசா தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்; எனினும், விபத்து எப்படி நடந்தது என்ற விபரங்கள் வெளியாகவில்லை

▪️ஒடிசா மாநில மீட்புப்படை, தேசிய மீட்பு மற்றும் நிவாரணப்படைகள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

▪️132 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது; உயிரிழப்பு குறித்து இதுவ்ரை அரசு தகவல்கள் வெளியாகவில்லை

▪️மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்கள் ஒடிசா முதலமைச்சருடன் பேசி நிலைமையை கேட்டறிந்து, மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் உதவுவதாக உறுதியளித்துள்ளனர்.

சிக்னல் கோளாறு காரணமாக 2 ரயில்களும் ஒரே பாதையில் வந்து நேருக்கு நேர் மோதியதாக முதற்கட்ட தகவல்.பஹானாகா வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு பணியில் சிக்கல்.

 

 

Tags :

Share via