மோசடியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது
மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பாஜக நிர்வாகியிடமே, விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.கே.சுரேஷ் பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வி.கே.சுரேஷ்-ஐ கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், துறைமுகம் அல்லது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 2017ல் 11 லட்சம் பணம் பெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும், இதே வழக்கில் ஏற்கனவே மாவட்டச் செயலாளர் கலையரசனும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :