தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் நேற்று(21-11-2022) விடுதலை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. உலக மீனவர் தினத்தன்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டது கூடுதல் மகிழ்ச்சி.கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்டுத் தரக் கோரி காரைக்கால் கோட்டுச்சேரி பகுதி மீனவர் பஞ்சாயத்தினரும் அவர்களது குடும்பத்தினரும் கோரிக்கை வைத்தார்கள். அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருந்தோம்.மீனவர்களின் விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்த மத்திய அரசுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் மீனவர்கள் சார்பிலும் புதுச்சேரி மக்கள் சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்- துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
Tags :