14 பேர் பலி.. 40 பேர் படுகாயம்
மத்திய பிரதேசம் | ரேவாவில் சுஹாகி ஹில்ஸ் அருகே பேருந்தும் லாரியும்மோதிக் கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர். ஹைதராபாத்தில் இருந்து கோரக்பூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் இருந்த அனைவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து விபத்து நடந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Tags :