எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்கி பார்க்கட்டும்-உதயநிதி ஸ்டாலின்
திருநெல்வேலிமாநகராட்சிபகுதியில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் திமுக-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.இன்று அவர் நெல்லை பகுதியில் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:தமிழக சட்டமன்றத்தை முடக்க போவதாக சொல்லும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்கி பார்க்கட்டும்,பாஜக இருக்கும் தைரியத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்க போவதாக பேசுகிறார்.
சட்டமன்றத்தை முடக்கி தேர்தல் வைத்தால் 200 இடங்களை திமுக மீண்டும் வெற்றி பெறும்,
திமுக பொறுப்பேற்ற பின் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது.கொரனா வார்டுக்குள் சென்று சிகிச்சை குறித்து ஆய்வு செய்தது இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டும் தான்.ஆட்சி அமைந்து 9 மாதம் தான் ஆகிறது.அதில் முதல் 3 மாதம் கொரனா நோய் தொற்றால் ஓடிவிட்டது.அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி வாங்கி கஜனாவை காலி செய்துவிட்டனர்.
கொரனா நிவாரணம் வழங்கப்படும் என சொன்னதை திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் தந்தார்.
8 மாதத்தில் படிப்படியாக அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சிலிண்டர் விலைகுறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் சொன்னதை அனைத்தும் செய்வோம்.என உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
Tags : Let Edappadi Palanisamy shut down the assembly - Udayanithi Stalin