16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை 3 குழந்தைகளின் தந்தை கைது.

by Editor / 24-02-2023 07:51:13am
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை 3 குழந்தைகளின் தந்தை கைது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி. துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு என்கின்ற பாலசுப்பிரமணியன் (43). திருமணமான இவர்,  லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு கூலி வேலை செய்து வந்த 16 வயது சிறுமியை  பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மூன்று மாத கர்ப்பிணியான சிறுமியை ஏமாற்றியது தெரியவந்ததையடுத்து  போலீசில் புகார் அளித்ததீன் பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்  வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பாலு என்கின்ற பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.

 

Tags : சிறுமி பாலியல் வன்கொடுமை 3 குழந்தைகளின் தந்தை கைது.

Share via