பள்ளி மாணவியை திருமணம் செய்த சிறுவன் போக்சோவில் கைது

by Editor / 10-11-2021 06:06:29pm
பள்ளி மாணவியை திருமணம் செய்த சிறுவன் போக்சோவில் கைது

மாணவியை திருமணம் செய்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஒலகடம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் உறவினர்கள்.
 
அந்த சிறுமி அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தான். இந்நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுவன் பழகி வந்துள்ளான். சம்பவத்தன்று மாணவியை சிறுவன் கடத்தி சென்று உள்ளான்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வெள்ளித் திருப்பூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சிறுவனைத் தேடி வந்தனர். விசாரணையில் சிறுவன் மாணவியை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் மீட்ட போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories