கொச்சின் துறைமுகத்தில் தமிழக மீனவர் உயிரிழப்பு
கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்த நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி கிராமத்தை சேர்ந்த மீனவர் கேசவன் விசை படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.
கடந்த 1 ஆம் தேதி ராஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தமிழக மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.மீன்பிடி தொழில் முடித்துவிட்டு 20 ஆம் தேதி இரவு துறைமுகத்தில் இருந்த விசைப்படகில் தூங்கியபொழுது தவறி விழுந்த கேசவன் மற்றொரு இரும்பு படகில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழப்பு.
பிரேத பரிசோதனை முடிந்த மீனவர்களின் சடலத்தை தமிழகம் அனுப்பி வைக்க உள்ளதாக கொச்சின் காவல்துறை தகவல்
Tags :