ஜப்பான் நிலநடுக்கம்.பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

by Editor / 03-01-2024 09:09:48am
ஜப்பான் நிலநடுக்கம்.பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

கடந்த 1 ஆம் தேதியான புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்க பாதிப்பில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். திங்கட்கிழமை ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. இவற்றில் ஒன்று அதிகபட்சமாக 7.6 ஆகவும், மற்றவை 3 முதல் 6 ஆகவும் இருக்கும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், நிவாரணப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

 

Tags : ஜப்பான் நிலநடுக்கம்.பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Share via