பூடானுக்கு இந்தியா 2வது தவணை தொகை விடுவிப்பு
![பூடானுக்கு இந்தியா 2வது தவணை தொகை விடுவிப்பு](Admin_Panel/postimg/38innnnnn.jpg)
ஜியால்சுங் திட்டம் தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக பூடானுக்கு இரண்டாவது தவணை உதவியின் கீழ் இந்தியா ரூ.500 கோடியை விடுவித்துள்ளது. ஜியால்சங் திட்டம் தொடர்பாக இந்திய அரசு மொத்தம் ரூ.1,500 கோடி வழங்குவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே இந்த ஆண்டு ஜனவரி மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் தவணையாக ஜனவரி 28ஆம் தேதி ரூ.500 கோடியை வெளியிட்டது. இரண்டாவது தவணை மூலம் இந்த தொகை ரூ.1000 கோடியை எட்டியுள்ளது.
Tags :