வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்

by Staff / 01-04-2024 04:41:51pm
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் மொத்தம் 950 பேர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று(ஏப்ரல் 1) தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி வருகின்ற 14ஆம் தேதி உடன் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via