சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடி மீது சரமாரி தாக்குதல்

தெலங்கானா: வாராங்கல்லில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி மீது குடும்பத்தினர் சரமாரி தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிராஜ் - நிதிஷா ஆகிய இருவரும் ஒரு வாரத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின், பாதுகாப்பு கோரி இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகுந்து மணிராஜை சரமாரியாக தாக்கி நிதிஷாவை அழைத்துச் செல்ல முயன்றனர். இதையடுத்து, போலீசார் இருவரையும் காப்பாற்றினர்.
Tags :