துண்டு துண்டான வாலிபர் உடல்
மத்தியப் பிரதேச மாநிலம் கோவிந்த்நகரைச் சேர்ந்த சரண் நர்வாரியா (30) என்பவர் ஆக்ரா-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். பனிமூட்டம் காரணமாக விபத்தை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், உடல் மீது பல வாகனங்கள் ஏறி சென்றதால், உடல் நசுங்கி சுமார் 100 மீட்டர் தூரம் துண்டு துண்டாக சிதறியது. திங்கட்கிழமை காலை, ஒரு நபரின் தகவலின் பேரில் போலீசார் அந்த இடத்திற்குச் சென்று அங்கு கிடைத்த ஆதாரங்களின்படி இறந்தவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
Tags :