செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கியுள்ளனர். சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளது. பலமுறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளதால், அவரது மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tags :