ரயிலில் கஞ்சா புகைத்த தொழிலாளி பலி

by Staff / 09-08-2023 04:54:50pm
ரயிலில் கஞ்சா புகைத்த தொழிலாளி பலி

பீகாரைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி சுரேந்திர பாசுவான். இவர் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று பீகார், கயா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்டிரல் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். ரயிலில் ஏறிய பின்னர் இவர் அளவுக்கு அதிகமாக கஞ்சா புகைத்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரயிலில் வந்து கொண்டிருந்தபோதே அவர் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். நேற்று காலை சென்னை வந்து இறங்கியதும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் மருதுவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

 

Tags :

Share via