முதலமைச்சர் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.
இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன் சொந்த தொகுதியானகொ ளத்தூர் பெரியார் நகரில் உள்ள திருவள்ளூர் கல்யாணம் மண்டபத்தில்கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய தூய்மை பணியாளர் 600 பேர்களுக்கு அரிசி ரெயின் கோட் கூட வெயிட் சீட் பால்பவுடர் துவரம் பருப்பு போன்ற அத்தியாவாசி பொருள்களை வழங்கியதோடு அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார். இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சி.எஸ்.ஐ. புத்துயிர் சிறப்புப் பள்ளியில் பயிலும் 70 மாற்று திறனாளி குழந்தைகளின் நலன் மற்றும் பள்ளியின் மேம்பாட்டிற்காக கணினி., பிரிண்டர், பீரோ உள்ளிட்ட இரண்டு லட்ச ரூபாய்க்கான பொருட்களை பள்ளியின் தாளாளிடம் முதலமைச்சர் வழங்கினார் .அத்துடன் பாலாஜி நகரில் மருத்துவ முகாமைத்தொடங்கி வைத்ததோடு பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகுறித்து நேரில் கேட்டு அறிந்தார்.
Tags :