45 வயது மதிக்கத்தக்க பெண் எரித்து கொலை

by Staff / 06-02-2024 12:23:44pm
45 வயது மதிக்கத்தக்க பெண் எரித்து கொலை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் தலை, கை எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் கொள்ளிடம் போலீசார், எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் குறித்து விசாரணை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். பின்னர் பெண் சடலத்தை உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் யார், பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via