விடுமுறை தினமான இன்று அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.

by Editor / 16-02-2025 03:53:00pm
விடுமுறை தினமான இன்று அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இதுமட்டுமின்றி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு இருமுடிக்கட்டி சென்று ஊர் திரும்பும் பக்தர்கள்  என ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

Tags : விடுமுறை தினமான இன்று அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.

Share via