கிணற்றில் மூழ்கி நெடுஞ்சாலை துறை பணியாளர் பலி

by Staff / 11-11-2022 04:23:17pm
 கிணற்றில் மூழ்கி நெடுஞ்சாலை துறை பணியாளர் பலி

மேட்டூர் அடுத்த வனவாசி அருகே உள்ள சாணாரப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (48). நெடுஞ்சாலைத்துறை பணியாளராக வேலை பார்த்து வந்தார். முருகன் நேற்று மாலை நண்பர்களுடன் அருகிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். ஆழமான பகுதிக்கு சென்ற முருகன் நீரில் மூழ்கினார். இது தொடர்பாக நங்கவள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via