காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்டவிரோத மது பாட்டில்கள் விற்பனை- 30 நபர்கள் கைது.

by Editor / 03-10-2022 09:08:04am
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்டவிரோத  மது பாட்டில்கள் விற்பனை- 30 நபர்கள் கைது.

தென்காசி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 30 நபர்கள் கைது செய்யப்பட்டனர்
இவர்கள் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,மேலும் இவர்களிடமிருந்து 1400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தகவல். மேலும் சங்கரன்கோவில் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களிடமிருந்து 28 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via