ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் உயிரிழப்பு.

by Staff / 20-07-2025 12:07:58pm
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம்  திருக்கோவிலூர் அருகே அன்று நடந்த பயங்கர கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில், காரில் பயணித்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

Tags : 4 members of the same family die in an accident.

Share via